-
Dinamalar
-
வரும் தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி : ராமதாஸ்
வேலூர்: ""வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திருப்பத்தூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. ஸ்ரீ பெரும்புதூர் அருகே 25 கிராமங்களை அப்புறப்படுத்தி விட்டு சென்னை, "கிரீன் பீல்டு' விமான நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, விளை நிலங்களை ...
-
அ.தி.மு.க., ஆட்சியில் சத்துணவு ஊழியர்கள் குறை தீரும்: ஜெ.,
சென்னை : "போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக கைவிட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:"காலமுறை ஊதிய விகிதம், ஓய்வூதியம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 30ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும்' என, சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது. இவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க தி.மு.க., அரசு முன் வரவில்லை.கடந்த 29ம் தேதி முதல் வெளி மாவட்டங்களிலிருந்து சத்துணவு ஊழியர்களை ...
-
சுயாட்சி - கூட்டாட்சி தத்துவம் புரியாதவர் ஜெயலலிதா :முதல்வர் கருணாநிதி
சென்னை : "மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் புரியாதவர் ஜெயலலிதா' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்த அவரது கேள்வி - பதில் அறிக்கை:
அ.தி.மு.க., அரசு வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசின் உதவியை பெறுவதாக இருந்ததாகவும், அதை தி.மு.க., தடுத்துவிட்டதாகவும் ஜெயலலிதா குறை கூறியிருக்கிறாரே?
அ.தி.மு.க., ஆட்சியில் 2005ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில், தி.மு.க., சார்பில் உதவிகள் அளிக்கப்பட்டன. அ.தி.மு.க., அரசு கேட்ட 1,000 கோடி ரூபாய் நிவாரண உதவியை குறைக்காமல் வழங்க மத்திய அரசுக்கு தி.மு.க., வேண்டுகோள் ...
-
சுவிஸ் வங்கிகளில் உள்ள பணம் திரும்ப பெற அடுத்த முயற்சி
புதுடில்லி : சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குவித்துள்ள பணம் பற்றிய விவரங்களை பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் சட்டவிரோதமாக பணத்தை குவித்து வைத்துள்ளன. அதை பற்றிய விவரங்களை அந்நாட்டு வங்கிகளிடமிருந்து பெறும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.அதன் ஒரு முக்கிய கட்டமாக, நேற்று முன்தினம் டில்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர் மிச்சலின் கால்மி - ...
-
தமிழக மீனவர்கள் துயரம்: அரசு நடவடிக்கை எப்போது?
கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்களுக்கு ஏற்கனவே இருந்த மீன்பிடி உரிமையை மீண்டும் பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பார்லிமென்டில் வலியுறுத்தின. இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, தற்போது நிருபமா ராவ் அங்கு பேச்சு நடத்துவதாகவும், அடுத்து, அக்டோபரில் தான் அங்கு செல்வதாகவும் தெரிவித்தார். மீனவர் பிரச்னை குறித்து உரிய தீர்வு காணப்படும் எனக் கூறினார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தினரின் தாக்குதல் குறித்து லோக்சபாவில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு ...