-
Dinamalar
-
பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரில் புயல்?: 45 பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட
பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரில், ஊழல், விலைவாசி உயர்வு, லோக்பால் மசோதா, ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு உட்பட 45 பிரச்னைகளை, ஒத்திவைப்புத் தீர்மானம் உட்பட பல வழிகளில் எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதனால், பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரில் புயல் வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், வரும் 22ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, டில்லியில் நேற்று, அனைத்துக் கட்சி பார்லிமென்ட் தலைவர்களின் கூட்டத்தை, சபாநாயகர் மீராகுமார் கூட்டியிருந்தார். ...
-
சிரஞ்சீவிக்கு மந்திரி பதவி உறுதி : சோனியா உத்தரவாதம்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவை, டில்லியில் சந்தித்துத் திரும்பியுள்ள நடிகரும், திருப்பதி எம்.எல்.ஏ.,வுமான சிரஞ்சீவிக்கு, அடுத்த ஆண்டு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ராஜ்யசபா எம்.பி.,யானதும் பதவி வழங்கப்படும் என, சோனியா உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆந்திராவில், பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் துவக்கி, பின், அதை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தவர் நடிகர் சிரஞ்சீவி. இவர், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை, டில்லியில் சந்தித்துப் பேசினார். அதன்பின், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: எனது ...
-
சிதம்பரம், ராஜா எடுத்த முடிவுகள் என்னென்ன? : "2ஜி' வழக்கு ஆவணம் சாமியிடம் ஒப்படைப்பு
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரமும், ராஜாவும் எடுத்த முடிவுகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணத்தை, பாட்டியாலா கோர்ட் உத்தரவுப்படி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமியிடம், சி.பி.ஐ., நேற்று ஒப்படைத்தது. "2ஜி' வழக்கு விசாரணையில், முன்பு நிதி அமைச்சராக இருந்த, தற்போதைய உள்துறை அமைச்சரான சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று, சுப்ரமணியசாமி சார்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் கடந்த செப்டம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, சாமி சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ...
-
பஸ் - மின் கட்டணங்கள், பால் விலை, "விர்ர்...!'
மலைபோல் கடன்தொகை அதிகரித்து, திவாலாகும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை மற்றும் ஆவின் ஆகிய மூன்று துறைகளையும் காப்பாற்றும் வகையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா அதிரடி முடிவுகளை எடுத்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களாக, மக்கள் கசப்புறும் வகையில் எவ்வித முடிவுகளையும் எடுக்காமல், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஜெயலலிதா, முதல் முறையாக போக்குவரத்து கட்டணங்கள், ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளை கணிசமாக உயர்த்தி, மக்களுக்கு கசப்பு மருந்து ...
-
கட்டணங்களை உயர்த்தியது ஏன்? முதல்வர் விளக்கம்
சென்னை: பஸ் கட்டணம், ஆவின் பால் விலை ஆகியவற்றை உயர்த்துவதற்கான காரணங்களை, முதல்வர் ஜெயலலிதா விரிவாக விளக்கியுள்ளார். இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த சட்டசபை தேர்தலில், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்று, தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக எனது அரசு நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில், துறை வாரியாக நடந்த ஆய்வுக் கூட்டங்களின்போது, மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் கடும் கடன் சுமை காரணமாகவும், நிதி நெருக்கடி காரணமாகவும் முடங்கும் அபாயத்திற்கு வந்துள்ளது ...